வளம் சேர்க்கும் வீட்டு சாஸ்திரம்


வாஸ்து என்பது வாழும் இடம் என்பது பொருள்படும். ஜோதிட சாஸ்திரத்தின் உட்பிரிவுகளில் ஒன்றான இந்த வாஸ்து சாஸ்திரம். இப்பிரபஞ்சத்தில் நிறைந்துள்ள பஞ்ச பத தத்துவங்களின் தன்மைகளுக்கு ஏற்ப நாம் வசிக்கும் வீட்டை அமைத்து வாழ வழி சொல்லும் ஒரு அளவிடுகளின் கணித அடிப்படையான அரும் பெரும் கட்டிட கலையாகும். இதை மிக சரியாக கையாள வேண்டும். மக்களும் வாஸ்து நிபுணர்களை சரியானபடி தேர்ந்தெடுக்க வேண்டும்
ஒவ்வொரு மனிதருக்கும். உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம் இம் மூன்று சரியாக கிடைத்தால் தன்னை வளப்படுத்தவும், நாட்டையும். வளப்படுத்த முடியும், வீடு வளம்பெற்றால் நாடு நலம் பெறும். நாம் வசிக்கும் வீட்டை முன்னோர்கள் சொல்லியப்படி அமைத்து துன்பமின்றி வாழ்வில் சாதனைகள் பல செய்வோம் வாருங்கள்.
1. ஒரு வீட்டின் அமைப்பு சதுரம், செவ்வகம் போன்ற அமைப்புடையதாக இருப்பது அவசியம்
2. உடுக்கை வடிவம். முக்கோண வடிவம். வட்ட வடிவம், மற்றும் ஒழுங்கற்ற வடிவமுள்ள மனைகளை வாங்க கூடாது
3. ஒவ்வொரு அறைகளும் வாஸ்து சாஸ்திர அளவின் படி அமைந்திருக்க வேண்டும்
4. சூரிய வெளிச்சம் அதிக நேரம் வீட்டிற்குள் பட வேண்டும்
5. வீட்டிற்கு வெளியே அதிகமான வெட்ட வெளி இருக்க கூடாது
6. ஆற்று கரையோரங்களிலும், நீர் நிலைகள் நிறைந்த பகுதிகளிலும் வீடுகட்டி வசிக்க கூடாது.
7. வீடு கட்ட ஆரம்பிக்க மிக சிறப்பு பெற்ற மாதங்கள் வைகாசி,ஆவணி, மாசி ஆகும்.
8. வீடுகட்ட ஆரம்பிக்க 2வது வரிசையில் சிறப்பு பெற்ற மாதங்கள் சித்திரை,ஆடி,ஐப்பசி,கார்த்திகை, தை
9. வீடு கட்ட ஆரம்பிக்கும் அன்று கீழ்காணும் நட்சத்திரங்கள் வரும் நாள் சிறப்பாகும். ரோகிணி,
10 வீடு கட்ட உகந்த கிழமைகள் திங்கள், புதன்,வியாழன்,வெள்ளி,சனி நலம்
11. வீட்டிற்குள் அமைக்கும் பொருட்கள் கூட வாஸ்து பலத்தை அதிகரிக்க செய்யும்
12. வீட்டில் அழுக்கு துணிகள் உடைந்த பொருட்கள் தேவையற்ற பழைய பொருட்கள் கண்ணீன்படாதவாறு வைக்கவும், தேவையற்றை போக்கிவிடலாம்.
திருதியை திதி - அனுசம் நட்சத்திரம்
சதூர்த்தியை திதி - உத்திரம் நட்சத்திரம்
பஞ்சமி திதி - மகம் நட்சத்திரம்
அஷ்டமி திதி - ரோகிணி நட்சத்திரம்
நவமி திதி - கார்த்திகை நட்சத்திரம்
மேலும் உங்கள் ராசி எதுவென்று அறிந்து அந்த காலங்களிலும் வீடு கட்ட ஆரம்பிக்க கூடாது.

வீட்டுக்குள் அமையும் அறைகள்

வீட்டிற்குள் அறைகள், கூடங்கள், வாசல் முதலானவை அமைக்கும் போது சாஸ்திரத்தைப் பின்பற்றிச் செயல்படுகிறது, ஏற்றமான பலன் கொடுக்கும். கீழ்க்கண்டவாறு அறையின் அகலம், நீளம் கணக்கிட்டுச் செயல்படுவது உத்தம்மான பலன் உண்டாக்கும்
                        6 அடிக்குக் குறைவான அறை அமைக்கக்கூடாது
7 அடி
குடும்ப நாசம், தரித்திரம்
58 அடி
நோய், மரணம்
8 அடி
இடையூறுக்குப் பின்பு நற்பலன்
59 அடி
பணத்தொல்லை
9 அடி
தனச்செலவு, வியாதி
60 அடி
செய்தொழில் அபிவிருத்தி
10 அடி
பாலும் சாதமும் பஞ்சமில்லை
61 அடி
கலகம், சச்சரவு
11 அடி
புத்தி வழியில் பொருட் செலவு
62 அடி
வறுமை நீங்கும்
12 அடி
புத்திர சுகம், குடும்ப முன்னேற்றம்
63 அடி
விரோதிகள் அழிவர், செல்வம் பெருகும்
13 அடி
பகை, வியாதி
64 அடி
புகழ் பாராட்டு, பரிசுகள் கிடைக்கும்
14 அடி

பாக்கியம், செல்வச்சேர்க்கை

65 அடி
மனைவிக்கு ஆகாது
15 அடி
பொருள்சேதம், துக்கசெய்தி
66 அடி
செல்வச்சிறப்பு
16 அடி
தீர்க்காயுள், செல்வம் சேர்க்கை
67 அடி
துர்தேவதை நடமாட்டம்
17 அடி
மனோபயம், சத்ரு நாசம்
68 அடி
அதிர்ஷ்டம், முன்னோர் சொத்து கிடைக்கும்
18 அடி
காரி ஜெயம்
69 அடி
பொருள் நாசம், தீ விபத்து
19 அடி
பொருள் இழப்பு
70 அடி
நாடு தழுவிய புகழ், செல்வப்பெருக்கு
20 அடி
இன்பம், சுகம், தீர்க்காயுள்
71 அடி
பொருள் வரவு
21 அடி
தர்ம சிந்தனையுள்ள வாழ்வும் புகழ்
72 அடி
கல்வி, பொன், பொருள் பெருக்கு
22 அடி
பகையினம் அழியும்
73 அடி
புத்திர சோகம்
23 அடி
நோய் நொடி, கெடுதியும் ஏற்படும்
74 அடி
அரசரால் போற்றப்படல்
24 அடி
இல்லால் பொருட்டு, துன்பம் சேரும்
75 அடி
பொருள் நஷ்டம், மரணம்
25 அடி
சீரான வாழ்வு அமையும்
76 அடி
பிறர் உதவிலேயே வாழ்க்கை
26 அடி
செல்வமும் சிறப்பும் சேரும் நற்பலன்
77 அடி
வண்டி, வாகனம், நிலபுலன் யோகம்
27 அடி
அரசனையொத்த வாழ்வு அமையும்
78அடி
மக்களால் தொல்லை
28 அடி
இறைவன் அருளால் நன்மைகள்
79 அடி
பொருள் அபிவிருத்தி
29 அடி
நல்வாரிசுகள் அமையப் பெறுவர்
80 அடி
லஷ்மி வாசம், பொன், பொருள் சேர்க்கை
30 அடி
மூதாதையர் செல்வங்களால் சிறப்பு
81 அடி
குடும்பத் தலைவனுக்கு ஆபத்து
31 அடி
கூடிவாழும் பாக்கியம் கிட்டும்
82 அடி
இயற்கையின் சீற்றத்தால் அழிவு
32 அடி
நட்டங்களை ஈடு செய்யலாம்
83 அடி
ஆனந்தமான வாழ்க்கை
33 அடி
நன்மைகள் குறைவின்றி அமையும்
84 அடி
வறுமை தலைகாட்டாது
34 அடி
சீர் குலைய நேரிடும்
85 அடி
சொர்க்கயோகம்,செல்வாக்கு, செல்வப்பெருக்கு
35 அடி
முன்னேற்றம் நிச்சயம்
86 அடி
சொல் தவறுதல், ஏமாற்றத்திற்குள்ளாதல்
36 அடி
இன்பங்கள்சேரும்,வெற்றியுண்டு
87 அடி
வண்டிவாகனம் கிடைத்தல்
37 அடி
கால்நடை இனங்கள் பெருகும்
88 அடி
தர்ம காரியங்கள் அபிவிருத்தி
38 அடி
தடைகள் மேலோங்கும்
89 அடி
உறவினர்-நணபர்கள் சூழ மகிழ்ச்சியான வாழ்க்கை
39 அடி
ஊக்கம் புதிய முயற்சிகள் மேலோங்கும்
90 அடி
செல்வப்பெருக்கு
40 அடி
எதிரிகளால் தீமைகள் பெருகும்
91 அடி
அறிவாற்றல்அதிகரிப்பு, செல்வச்சேர்க்கை
41 அடி
ஏகபோகங்கள் எண்ணிலடங்காது
92 அடி
பாரோர் போற்றும் புகழ்
42 அடி
திருமகள் நிரந்தரமாக
93 அடி
அரசாங்க விரோதம்
43 அடி
நன்மையை எதிர்பார்க்க இயலாது
94 அடி
வறுமை, சொத்துக்கள் பறிபோதல்
44 அடி
ஐம்பொறிகள் சம்பந்தமான நோய்வரும்
95 அடி
செல்வச் சேர்க்கை
45 அடி
பிள்ளைச் செல்வம் பெருமை சேர்க்கும்
96 அடி
பொன், பொருள் அபிவிருத்தி
46 அடி
இடமாற்றம் தவிர்க்க முடியாது
97 அடி
வெளிநாட்டுத்தொடர்பு,குடும்பஅபிவிருத்தி
47 அடி
பொருள் இழப்பு
98 அடி
புகழ் மங்கும்
48 அடி
தோஷம் உண்டாகும்
99 அடி
இராஜயோகம்
49 அடி
துன்பம், துயரம், வறுமை
100 அடி
நீண்ட ஆயுள், குறைவற்றசெல்வம்
50 அடி
வீண் தொல்லைகள்
101 அடி
வளம் பெருகும்
51 அடி
வம்பு, வழக்கு
102 அடி
செல்வம், செல்வாக்கு அதிகரிப்பு
52 அடி
பொருள் அபிவிருத்தி
103 அடி
தீய காரியங்களால் தீமைகள் பல அரசாங்க தண்டனைக்கு உள்ளாகலாம்.
53 அடி
பெண்களால் துன்பம்
104 அடி
உணவு, உடைக்கும் பஞ்சமிராது
54 அடி
அரசாங்கத்தால் சீற்றம்
105 அடி
மனைவி, மக்களுக்குப்பீடை
55 அடி
பங்காளிகளின் தொல்லை
106 அடி
சீரும்,சிறப்பும் உண்டாகும்
56 அடி
மக்கள் செல்வம் பெருகும்
107 அடி
பொருள் இழப்பு
57 அடி
புத்திரப் பேறு இல்லை
108 அடி
திருமகள், கலைமகள் அருள் கிடைக்கும்


வீடு ஆரம்பிக்க தவிர்க்க வேண்டிய கிழமையுடன் கூடிய நட்சத்திரம்
ஞாயிற்றுக்கிழமையில் - பரணி நட்சத்திரம் வந்தால்
திங்கள்கிழமையில் - சித்திரை நட்சத்திரம் வந்தால்
செவ்வாய்க்கிழமையில் - உத்திராடம் நட்சத்திரம் வந்தால்
புதன்கிழமையில் - அவிட்டம் நட்சத்திரம் வந்தால்
வியாழன்கிழமையில் - கேட்டை நட்சத்திரம் வந்தால்
வெள்ளிகிழமையில் - பூராடம் நட்சத்திரம் வந்தால்
சனிக்கிழமையில் - ரேவதி நட்சத்திரம் வந்தால்

No comments:

Post a Comment